ஏக்கம்

வானில்லாமல் நிலவேதடி
வாசமில்லாமல் மலரேதடி?
கண்ணில்லாமல் ஓவியமேதடி
கருவில்லாமல் கவிதையேதடி?

நிஜமில்லாமல் நிழலேதடி
நீரில் லாமல் உலகேதடி? அன்பில்லாத அன்னையேதடி
அரவணைப்பில்லாத தந்தையேதடி?

இருளில்லாத இரவேதடி
பகலவன் இல்லாத பகலேதடி?
புதிரில்லாமல் விடையேதடி
புரிந்து கொண்டால் வெறுப்பேதடி?

காயத்தில்பட்டக் காயம்
ஆறிவிடும்...
உன் கண்கள் சுட்டெரிக்கும்
தீ என்று அணையுமோ?
அருகில் வந்துஅணைத்துவிடு!
ஆதரவாய் இருந்துவிடு!!

எழுதியவர் : ரோகிணி (6-Jun-21, 3:42 pm)
பார்வை : 233

மேலே