உன்னருகில் நான் இருக்க நினைக்கிறன் 555
***உன்னருகில் நான் இருக்க நினைக்கிறன் 555 ***
என்னுயிரே...
என் மனதை
நீ அறியாவிட்டாலும்...
உன் ஆழ்
மனதை நான் அறிவேன்...
காற்று
செல்லக்கூட இடமில்லை...
உன்
இரும்பாலான இதயத்தில்...
இரும்பையும் துளை இடலாம்
சில கருவிகள் கொண்டு...
நான்
உன்னிதயத்தில் உட்புகுவேன்...
என் அன்பு
என்னும் கருவி கொண்டு...
ஒருதலை காதல் என்றாலும்
உனக்கு உண்மையாகவே இருக்கிறேன்...
இன்பமோ
துன்பமோ எப்போதும்...
உன்னருகில் நான்
இருக்க நினைக்கிறன்...
உயிரின் வாழ்க்கை
நிலையற்றதுதான்...
என் வாழ்க்கையில் நிலையாக
நீ இருக்க அசையடி எனக்கு...
என்றும் என்
வாழ்க்கையில் நீ வேண்டுமடி.....
***முதல் பூ பெ.மணி.....***