பெண்ணின் உள்ளமது

வஞ்சித்துறை

பெண்ணின் உள்ளமது
கண்ணின் விழியைப்போல்
கண்ணை கலங்காமல்
திண்மப் பொருளாலே --- (1)

கண்ணில் ஆடிசெய்து
கணக்காய் பார்ப்பதுபோல்
பிணக்கிலா முறையிலேயே
பெண்மை காத்திடுவோம் --- (2)

வெள்ளை மனமுண்டு
பிள்ளை குணமுண்டு
சொள்ளை சொல்கூறி
ஞெள்ளை என்றாவர் --- (3)

சொள்ளை - சொத்தை, இழுக்கு, காரியக்கேடு
ஞெள்ளை - நாய்

ஆயினும் பெண்களே
ஆயிரம் திறன்பெற்று
தீயினம் விரட்டுவர்
நோயின்றி வாழ்வரே --- (4)
----- நன்னாடன்.

தீயினம் - தீயோர் கூட்டம்

எழுதியவர் : நன்னாடன் (16-Jun-21, 10:47 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 44

மேலே