மிதி பாகல் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’த்’ ’ற்’ வல்லின எதுகை)

பித்தமொடு வாதப் பெருக்கைமிக வுண்டாக்குந்
தத்துகரப் பானைத் தருவிக்கும் - பற்றிரத
தாரபா ஷாணந் தமைமுறிக்குந் தப்பாது
காரவல்லி யாம்பாகற் காய்

- பதார்த்த குண சிந்தாமணி

இது பித்தம், வாதம், கரப்பான் இவற்றை உண்டாக்கும்; பாதரசம், அரிதாரம், பாடாணம் இவற்றை முறிக்கும்; இது கேரள நாட்டின் பத்தியக் கறியாகும்; இதற்குக் காரவல்லி என்று பெயர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jun-21, 10:48 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே