அம்மா
" அம்மா "
" சுமப்போம் என்று தெரிந்தே சுமக்கும் 'சுமைதாங்கி' !
அறுப்போம் என்று உணர்ந்தே குலை தள்ளும் ' வாழை '
மிதிப்போம் என்று அறிந்தே கிடக்கும்
' மிதியடி ' !
இறுதியில் வெறுப்போம் என்று தெரிந்தே ' அமுதூட்டும் பிறவி ' !
இன்றும் பொறுப்போம் என்றாவது சிரிப்போம்,
என நம்பி ஏமாறும் ' விசித்திர துறவி '!
அவள் தான் ' தாய் ' என்னும் அற்புதப் பிறவி !".
----------