விடியும்வரை விழித்திரு

இயந்திரமாய் இவ்வுலகம் இருக்கிறது,
இத்தனை புதிய படைப்புகளை கொடுக்கிறது,
வாழ்க்கைக்கு உதவிடவே நீ கண்டறிந்தாய்-ஆனால்,
நம் வாழ்க்கையையே அழிக்கிறது என்று பின்பு உணர்ந்தாய்,
புதிய கருவிகளை உருவாக்கி உயிர் கொடுத்தாய்,
அதைக்கொண்டு பூக்கின்ற‌ மலரையும் நீ கருவருத்தாய்,
பாவம் செய்தோம் மனிதர்களாய் பிறந்து,
பரிதவிக்கிறோம் அகதிகளாய் கிடந்து,
எலும்புகளும் சதைகளுமாய் இருக்கின்றோம்-உங்களுக்கு,
எங்கள் உயிர் கொடுத்து சந்தோஷம் கொடுக்கின்றோம்,
இப்படியே அனைவரையும் கொன்று விடு,
இவ்விலங்கையையே பினவரையாய் மாற்றிவிடு,
இதுவரை அடிமைபட்டே கிடந்து விட்டோம்,
சறுகுகளாய் கிடந்ததினால் சவகுழியில் தள்ளி விட்டாய்,
எங்கள் கனவுகளை மண்ணில் போட்டு புதைத்து விட்டாய்,
வாழ்வில் ஏமாற்றம் மட்டுமே கண்டு கொண்டோம்,
ஏங்கித் தவிக்கின்றோம்-விடியலுக்கு காத்திருக்க நாங்கள் விட்டில் பூச்சிகள் அல்ல,
சுட்டெரிக்கும் சூரியன்,
தமிழா உணர்ச்சியோடு எழுந்திரு,
உரிமைக்காக குரல் கொடு,
உண்மையாக உழைத்திரு-சுதந்திரம்,
கிடைக்கும் வரை மட்டும் பிழைத்திரு,
அதற்காக விடியும்வரை விழித்திரு.

எழுதியவர் : தமிழ் உதயன் (6-Jul-21, 12:03 pm)
பார்வை : 107

மேலே