எண்ணங்களால் பறப்போமா

எண்ணங்களால் பறப்போமா?
பருந்துகள் மட்டுமே
உயரப் பறக்க முடியும்
எனநினைத்து விடாதே!
ஊர்க்குருவியும்
உயரப்பறக்க முடியும்
என்பதை நம்பு!
இலக்கண
இலக்கியம்
படித்தவரா?
பாலசுப்பிரமணியம்
பாடலால் உயரப்பறந்து
கொண்டிருக்கிறார்பார்!
எட்டாம் வகுப்பு
எட்டாத
கண்ணதாசன்
கவியரசு ஆகவில்லையா?
பண்ணைபுரத்து
இளையராஜா
இசை வானில்
எவ்வளவு தூரம் 
எட்டிருக்கிறார்?
ஏ ஆர் ரகுமான்
ஆஸ்கார் எட்டி 
பிடிக்கவில்லையா?
இங்கே படித்த
சுந்தர் பிச்சை தான்
சிலிக்கன் வேலி வரை
உயரப் பறந்து 
இருக்கிறார்?
ராமேஸ்வர
தீவிலே பிறந்த
அப்துல் கலாம் தான்
முதல் குடிமகனாய்
உயரப் பறந்திருக்கிறார்!
உன்னாலும் முடியும் தம்பி
உறுதி மனதில் இருந்தால்
உனக்கும் சிறகு முளைக்கும்!
உயரங்கள் கைக்கு எட்டும்!
உயரம் என்பது
நீட்டலளவை அல்ல
அது அகன்ற அன்பின்
அளவை முறை!
அன்பை சிறகாக்கு
அது அறிமுகப்படுத்தும்
உம்மை
இவ்வையத்தோர்க்கு!
நீயும் உயர பறக்கலாம்
உன்னதங்களை
எட்டலாம்
எண்ணங்களால்
செவ்வாயில் குடியேறலாம்!!
கவிஞர் புஷ்பா குமார்

எழுதியவர் : கவிஞர் புஷ்பா குமார் (6-Jul-21, 3:50 pm)
சேர்த்தது : மு குமார்
பார்வை : 197

மேலே