பாதை மாறும் விழுதுகள்

உறவுகளை உதறிவிட்டு
உணர்வுகளை மிதித்துவிட்டு
தலையாட்டி பொம்மைகளாய்
தரணிக்கு நமைத் தந்த
ஆணிவேரை மறந்துவிட்டு
அறுந்து போகும் விழுதுகள்
பாதைகள் மாறி
பாசமற்று போகின்றன
தவிட்டு குருவிகளாய்!!!!!

எழுதியவர் : உமாபாரதி (1-Aug-21, 1:21 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 93

மேலே