அதுதான் காரணமோ
திடீரென்று மக்களை
சிரிக்க வைக்கிறாய்,
சிறிது நேரத்தில்
சிந்திக்க வைக்கிறாய்
பின் அழ வைக்கிறாய்
எப்படி உன்னால் முடிகிறது
என்று பாதிரியார்
ஒரு நடிகரிடம் கேட்டார்
“ பாதிரியார் தொடர்ந்தார்
பல நாட்கள் முயன்றும்
பிரசங்கம் பிரகாசிக்காமலும்
மக்களிடமிருந்து எந்த
உணர்வுகளுமில்லாது
இருப்பதின் காரணமென்ன ,
அதற்கு என்ன செய்ய வேண்டும் “
என்றார்
அதற்கு நடிகர்
எப்படி பாதிரியாருக்கு
எடுத்து சொல்லி புரிய வைக்க
தெரியாமல் ,” ஐயா, நீங்கள்
உண்மை சம்பவங்களை
சந்தேகத்துடனும்
தெளிவில்லாமலும்
போதிக்கிறீர்கள் “ என்றார்
நடிகர் தொடர்ந்தார்
“ நானோ நடக்காத
சம்பவங்களை
நடந்தது போலவும்,
நல்லது போலவும்
நடித்துக் காட்டுகிறேன் “
ஏன்று விளக்கினார்
அதுதான் காரணமோ !