கதறவேண்டும் போல்
கதறவேண்டும்.....
சில நேரங்களில்.....
"ஓ" என்று கதற வேண்டும்
போல் தோன்றும் ,
அப்போதெல்லாம்,
"ஒளி" ஒன்று என் மனதில்
தோன்றும் - அந்த,
ஒளிக்குள்ளே முகம்
ஒன்று தெரியும்,
"ஓ" என்று கதறுவேன்
மறுபடியும்.
அன்னை என்னை
அணைப்பது போலும்,
ஒளியோடு ஒளியாய்
கலப்பது போலும்,
ஒரு உணர்வு.
அந்த உணர்வினிலே
அடையும் மனம் அமைதி,
அதுவே பேரானந்தம்,
"ஓ" இது உண்மை
ஆக்கம்
சண்டியூர் பாலன்.