தனிமை இனிமையே

ஒரு வயதிற்கு மேல்
தனித்து வாழ்வதில்
ஒரு சுகமும் இருக்கு
ஒரு அர்த்தமும் இருக்கு
உலகத்தை
புரிந்து கொள்ளும்
ஞானம் பிறக்கிறது..!!

தனிமையை நீயே
எடுத்து கொண்டால்
அது சுகம்
அடுத்தவர் நமக்கு
கொடுத்தால்
அது வேதனை...!!

தனிமையில் வாழும்
போதுதான்
தனியாகத்தான்
வந்தோம்
தனியாகத்தான்
போக போகிறேம்
என்ற தத்துவம் புரிகிறது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (22-Sep-21, 7:13 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : thanimai inimaiye
பார்வை : 145

மேலே