நிமிடத்தில் எதுவும் நடக்கும் வாழ்க்கையில்

பணம்,பொன்,பொருள், வசதிகள் அனைத்தும்
எப்போது வேண்டுமானாலும் வரும் போகும்
ஆண்டவன் நினைத்தால் நிமிடத்தில்
ஒரு மனிதனை கோடீஸ்வரனாக்க முடியும்
அதே ஆண்டவன் நினைத்தால் நிமிடத்தில்
தரைமட்டமாக்கி கோடியில் உட்கார வைக்க
முடியும் ஆனால் மதிப்பு, மரியாதை, அன்பு,
பண்பு, பாசம், நிலையானது பணத்திற்காக
ஒருவரை தவறான வார்த்தைகள் மற்றும்
கைகளையும் ஓங்கி விடாதீர்கள் பிறகு
நினைக்கும் பொழுது உறவு மீண்டும்
சுகமாக கிடைப்பது மிக சிரமம்.

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (9-Oct-21, 9:22 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 110

மேலே