நாணயம் பேசும் விசித்ரம்

நாணயம் பேசும் சித்திரம் விசித்ரமே
அதில் கண்டேன் புது சூத்திரம்
வரிகளாக தந்திட்டேன் பத்திரம்...

தலையை தலைவனாகவும் பூவை பூவையராகவும் கருத்தில் கொளின்
வாழ்வியல் தத்துவம் தகும் தவமாக...

பூவுக்கும் தலைக்கும் மறுபக்கம் தனி
ஆயினும் தரும் ஒரே மதிப்பாக...
தலையே பிரதானம் ...பூவின் மதிப்பே
தலைக்கும் தகும் ...குறியீட்டில் ஒன்றி

இரு கண்கள் காணும் ஓர் பிம்பம் ஆக
இருவருக்கும் ஒர் வாழ்வு...அதில் உண்டு ஏற்றத்தாழ்வு ...

தலையில் சூடிட பூவும் ...பூவை சூடிட தலையும் தகவமைத்து கொளல் தன்னிரிகல்லா தத்துவம்....

இதுவே வாழ்வின் யதார்த்தம் ...அன்றில் அன்றாடம் ஆகிடும் அமர்க்களம் ...

நாணயம்-- காசு

எழுதியவர் : பாளை பாண்டி (27-Oct-21, 10:37 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 141

மேலே