பெருமரப் பட்டை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பெருமரப் பட்டையது பேதி கிராணி
மருவிரத்த நோயினத்தை மாற்றுந் - திருவே
நடலைபுரி வாதத்தை நாடாத கற்றும்
உடலையிரட் சிக்குமென வோது

- பதார்த்த குண சிந்தாமணி

பேதி, கிராணி, உதரநோய், வாதம் இவற்றை பெருமரப்பட்டை நீக்கி உடலைப் பருக்கச் செய்யும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Dec-21, 1:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே