காகமும் நரியும்
காகமும் நரியும்.
&&&&&&&&&&&&&*
பாட்டி சுட்ட வடையினை
பார்த்து எடுத்த காகமும்
காட்டு மரத்தில் அமர்ந்தது
கடித்துத் தின்ன முயன்றது
வேவு பார்த்த நரியதும்
வேக மாக வந்தது
தாவும் வேகம் ஓழித்தது
தரையின் மீது படுத்தது
பாட்டிற் சிறந்த காகமே!
பாடல் ஒன்று பாடுக
காட்டு நரியும் கேட்டது
காகம் தனககுள் நகைத்தது
வடையைக் காலால் மிதித்தது
விடையை வாயால் இசைத்தது
விடையை நரியும் கேட்டது
வெட்கிக் காட்டில் மறைந்தது!
-யாதுமறியான்.