மூவாயிரமாவது எனது படைப்பு மௌன புன்னகையில் ஒரு காதல் 555

***மூவாயிரமாவது எனது படைப்பு***

***மௌன புன்னகையில் ஒரு காதல் 555 ***


காதல்...


தினம் தினம் காலையில்
ஓர் நடை பயணம்...

இயற்கையை ரசித்து கொண்டே
சில நிமிடங்கள் பூங்காவில்...

பறவைகளின் ஓசையோடு
ஓர் புது இசை...

கலகல சிரிப்போடு சிரிப்பின் திசையில்
மழலையோடு மழலையாக நீ...

மழலைபோல
விளையாடி கொண்டே...

உங்களை பார்த்து
சிரித்துக்கொண்டே நானும்...

அருகில் வந்தவள்
என்ன சிரிப்பென்றாய்...

உங்கள் மழலை போலவே
நீங்களும் சுட்டிதனம் என்றேன்...

கோபத்துடன் அது
என் அண்ணன் மகள் என்றாய்...

தூரம் சென்றவள்
கோபத்துடனே திரும்பி பார்த்தாய்...

மறுநாளும் நான்
இயற்கையை ரசிக்க...

மீண்டும்
மழலையோடு மழலையாக...

நேற்றைய
உன் கோபம் நினைவுவர...

பார்க்காதது போல்
என் முகம் திருப்பி கொண்டேன்...

என்னை
கடந்து சென்றவள்...

உன் குறும்பை நிறுத்திவிட்டு
கொன்றுவிடுவேன் என்று மிரட்டினாய்...

மௌன
புன்னகையில் நான்...

இரண்டு நாள்
உன்னை காணவில்லை...

நீ வரமாட்டாய் என்று
நினைக்கையில் வந்தாய்...

புறாக்கள் கொஞ்சல்களில் என்னை
மறந்து நான் ரசித்து சிரிக்க...

என்ன தனிமையில்
சிரிப்பு என்றாய்...

உன் கேள்வி புரியாமல்
என் பார்வையை உயர்த்தினேன்...

என்னை மறந்து புறாக்களின்
கொஞ்சல்களில் என்ன இருக்கு என்றாய்...

எனக்கும்
கத்தி சொல்ல ஆசை...

புறாக்களிடம் என்னை கொஞ்சவும்
ஒருத்தி இருக்கிறாள் என்று...

நாதுடித்தது இதழ்கள்
மௌனம் காத்தது...

தவறி கேட்டேன் எங்கே
உன் மழலை எங்கே...

கோபமாக அது என்று
கத்திவிட்டு சென்றுவிட்டாய்...

தொலைவில் போனவள்
ஓரப்பார்வை பார்த்தாய்...

கோபமில்லை உனக்கு
முன்னாள் செல்கிறது ஒரு மின்சாரம்...

இதோ இன்று
உனக்காக காத்திருக்கிறேன்...

என் காதலை சொல்ல எல்லோர்
போலவும் பூ சாக்லேட் கொடுத்தல்ல...

ருசிக்காவிட்டாலும் கரையும்
பனிக்கூழ் வைத்துக்கொண்டு...

பனிக்கூழ் கரைவதற்குள்
உன் வரவை எதிர்நோக்கி.....


***முதல்பூ .பெ .மணி .....***
***3000 வது படைப்பு***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (22-Mar-22, 5:34 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 159

மேலே