பாராமல் போயிருந்தால் பாவம் நான்

என் நாட்குறிப்பு சுவையான
பக்கங்களை இழந்திருக்கும்
என் கைகள் தனித்தே தவித்திருக்கும்...

வசந்தங்கள் என் வாழ்வில்
வராமலே போயிருக்கும்
வாடிக்கையான வாழ்க்கையையே
வாழ்ந்திருப்பேன்...

ஏற்ற இறக்கங்கள் வாழ்வை
இதப்படுத்தி இருக்காது
ஏமாற்றங்களும் எனக்குள்
சாதாரணமாகவே இருந்திருக்கும்

என் அன்பும் புழங்கப்படாமலே
பாசம் படிந்திருக்கும்
என் எண்ணங்கள் வெளிப்படாமலே
தூசியேறி போயிருக்கும்...

சில இடங்களில் சில படிப்பினைகளை
இழந்திருப்பேன்
நல்ல வேளை
என் கண்ணில் பட்டு விட்டாய் நீ...


அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (8-Apr-22, 6:26 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 142

மேலே