செந்தரா இலை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
அனில முளையும் அரோசகமும் நீங்கும்
தனியான தோஷமது தாழுங் – கனிமொழியே!
வெந்தாரைச் சூடும் விடாயும்போந் தீபனமாஞ்
செந்தரா வின்தழைக்குச் செப்பு
- பதார்த்த குண சிந்தாமணி
வாதமுளை மூலம் சுவையின்மை, வாதம் முதலிய தோடங்கள், நீர்த்தாரைச்சூடு, களைப்பு இவை நீங்கும்