கடமை

இன்னார்கு இன்னவேலை புலவர்சொன்னது

ஆசிரியப்பா


கருப்பை பாரம் பொய்என்று அறையென்று
வெறும்பயல் சிறப்பாய் மாற்றி தாயின்
சுமையை எண்ணா யாரும் செய்தார்
அன்னை யின்பெருங் கடனும் புறந்தர
ஈன்றல் செவிலி காக்க
தொல்லை நீங்கி வளரும் பிள்ளையே


அறிவை பிள்ளை ஏற்க ஊட்டல்
செறிவு மிக்க தந்தை வேலை
பாடு பட்டு கடனைப் பட்டும்
பிள்ளைக் கல்வி ஏற்க
தந்தை பேணல் வேண்டு மென்றாறே

வளைந்து போர் செய்ய கூர்வாள்
வேலை வடித்து ஈதல் கொல்லர்
கடனாம் பின்னே நன்நடை அவர்க்கு
நல்கல் நல்வேந்தர் கடனாம்
புலவர் புறநா நூற்றில் பகன்றாரே


நேரிசை வெண்பா


அவரவர் செய்யும் பணியில் பிறந்த
அவன்கடமை இன்னும் பகர்ந்தார் -- அவனும்
ஒளிறுவாள் சுற்றி சுழற்றி சமரில்
களிறைவெட்டி சாய்த்து வரல்

......

எழுதியவர் : பழனி ராஜன் (23-Apr-22, 11:51 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kadamai
பார்வை : 51

மேலே