SUKANUPAVAB PUNNAKAI

மலர் மடியில்
விழுந்தபோது
குனிந்து பார்த்தாய்
மழைத் துளிகள்
உன் மீது தூவியபோது
நிமிர்ந்து பார்த்தாய்
இளந்தென்றல் காற்று
உன்னைத் தழுவியபோது
கண்மூடி ரசித்தாய்
அப்போது உன்னையும்
உன்னிதழில் மலர்ந்த
சுகானுபவ புன்னகையும்
நான் ரசித்தேன்