பலரோடு பன்னாள் முயங்கிப் பொரீஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும் , நாலடியார் 220
இன்னிசை வெண்பா
மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்
பொரீஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும்
பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
மரீஇஇப் பின்னைப் பிரிவு 220
- நட்பாராய்தல், நாலடியார்
பொருளுரை:
பலநாள் பலரோடும் சேர்ந்து ஒத்துக் கலந்து பழகிப் பொருளாகத் தகுதி உடையோரையே நட்புக் கொள்ளல் வேண்டும்; ஏனென்றால், கடித்து உயிரை அழிக்கும் பாம்போடாயினும் கூடிப் பின்பு பிரிதல் இன்னாமையாகும்.
கருத்து:
பலமுறை நன்காராய்ந்த பின்னரே தக்காரோடு நட்புச் செய்தல் வேண்டும்.
விளக்கம்:
"ஆயந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை,
பொருவுதல், ஒத்தல்; பரிதல். அறுத்தல் "எருமை கயிறுபரிந்தசைஇ"2 என்புழிப்போல, கடித்தலென்னும் பொருட்டு. பொருட்டக்காரென்றது, உண்மைத் தகுதியுடையாரை என்க.