நீ இல்லாத உலகில்

வாழ்க்கையில்
விரக்தியின் உச்சம்
தொட்டதெல்லாம் தோல்வி
இன்னும்
வாழ வழியேயில்லை
என நினைத்து
தற்கொலைக்கு முடிவெடுத்து
தற்கொலையிலும் தோல்வி
கண்ட ஒரு ஜீவனை
மீதமிருக்கும் ஆயுளும்
இந்த உடலோடு ஒட்டி வாழ மறுத்து
ஒதுங்கி ஓடினால்
அந்த ஜீவனின் மனநிலை
எப்படியிருக்குமோ
அப்படி இருக்கிறது
என் மனநிலை
நீ இல்லாத இவ்வுலகில்..
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (24-May-22, 9:32 pm)
Tanglish : nee illatha ulagil
பார்வை : 312

மேலே