உன் மௌனத்தால் என்னை வதைக்காதே 555

***உன் மௌனத்தால் என்னை வதைக்காதே 555 ***
நெஞ்சினிலே...
பாடல்களில்
இல்லாத ரசனையை...
முதன் முதலில்
உன் குரலில் கேட்டேன்...
நீ வேறு திசை நான் வேறு திசை
நாம் பிறந்து வளர்ந்தது...
எதார்த்த சந்திப்பில் முதன்முதலில்
உன்னை கண்டேன்...
பலநாள் பழகியதை போல்
உள்ளுக்குள் ஒரு உணர்வு...
நாம் சந்திக்கும் இடத்திற்கு
நான் தாமதமாக வந்ததால்...
என்மீது உனக்கு
இத்தனை கோபம்...
உன் கோபம் தீரும்வரை
என்னை அடித்துவிடு...
இல்லை உன் இதழ்கள்
வலிக்கும்வரை வசைபாடிவிடு...
இப்படி மௌனத்தால்
என்னை கொள்ளாதே...
கலங்கும் உன்
விழிகளை கண்டால்...
என் இதய துடிப்பு
அதிகமாகுதடி...
மலரே கோபம் கொண்டு
நீ வாடிவிடாதே...
உன் மௌனத்தால்
என்னை வதைக்காதே...
பூத்து குலுங்கும்
மல்லிகை தோட்டம் போல...
உன் பூ முகம் எப்போதும்
மலர்ந்திருக்க வேண்டுமடி.....
***முதல்பூ.பெ.மணி.....***