வாழ்க்கை தத்துவம்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

*என் மொழி*

படைப்பு *கவிதை ரசிகன்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

யாரையும்
வெறுக்காமல்
இருக்க வேண்டுமானால்....
யாரையும்
அளவுக்கு அதிகமாக
நேசிக்காமல்
இருக்க வேண்டும்...!!!

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

மகிழ்ச்சியாக வாழ
ஆயிரம் வழி
இருக்கிறது.....
ஆனால்
கவலையின்றி வாழ
மூன்று வழிகள் தான்....
வருவது வரட்டும்
போவது போகட்டும்
நடப்பது நடக்கட்டும் என்று இருப்பதுதான்.....!!!

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

விழுந்து விடுவோம் என்று உட்கார்ந்து கொண்டே
இருப்பதை விட
விழுந்து விழுந்து நடப்பது
எவ்வளவோ மேல்....!!!

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

அன்பு செலுத்தாதவர்களை
எல்லாம்
கல்மனம் படைத்தவர்கள் என்று நினைத்து விடாதே......
அன்பை செலுத்தி
ஏமாந்தவர்களாக் கூட
இருக்கலாம்....!!!



*கவிதை ரசிகன்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

எழுதியவர் : கவிதை ரசிகன் (9-Jun-22, 9:16 pm)
பார்வை : 55

மேலே