ஒன்று

"பாதைகள் பல
இருந்தாலும்,
உனக்கென்ற பாதை
ஒன்று.

கூட பயணிக்க பலர்
இருந்தாலும்,
உனக்கென்ற துணை
ஒன்று.

வழியில் மரங்கள் பல
இருந்தாலும்,
உனக்கென நிழல்
தரும் மரம் ஒன்று.

இடையில் சுமை தாங்கி
பல இருந்தாலும்,
உன் சுமை தாங்குவது
ஒன்று.

நடையில் நீரூற்று பல
கிடந்தாலும்,
உன் தாகம் தீர்க்க
இருப்பது ஒன்று.

முடிவில் பலர்
ஓய்ந்திருந்தாலும்,
நீ உறங்கி ஒய்வெடுக்க
இருக்கும் இடம் ஒன்று.

இவ்வுலகம் பலவாறு
இருந்தாலும் ,
உனக்கென்ற வாழ்க்கை
ஒன்றே ஒன்று .

அதை புரிந்து
ஏற்றுக் கொண்டால்,
என்றைக்கும் நன்று!"

எழுதியவர் : (10-Jun-22, 7:25 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : ondru
பார்வை : 45

மேலே