புல் கூட்டில் திரவியம்

விண்ணின் இருளகற்ற
அழகிய விண்மீன் தோன்றியப் போல
மண்ணின் இருளகற்ற
பொன் ஒளி போல் தோன்றினீரே!

அரண்மனைகள் இங்கே
ஆயிரம் இருக்க
புல் தொழுவத்தில் ஒரு
வைரம் போல் தோன்றினீரே!

புனிதர்களும் இனியவர்களும்
உம் திருமுகம் காண
ஆண்டாண்டுகளாய் தவம் கிடக்க
இடயர்களுக்கும் மடயர்களுக்கும்
மாணிக்கம் போல் தோன்றினீரே!

பணம் கொண்டவர்கள்
கோடிகள் இருக்க
மனம் கொண்டவர்களிடம்
மரகதம் போல் தோன்றினீரே!

ஆலயத்தில் பிராத்தனை கீதம்.
உலகத்தில் ஆர்ப்பரிப்பு கீதம்.
தூய்மையான உள்ளத்தில்
முத்து போல் தோன்றினீரே!

எழுதியவர் : (24-Dec-22, 12:23 pm)
சேர்த்தது : பிரதீப்
பார்வை : 40

மேலே