எல்லோரும் பைத்தியம்தான்

எல்லோரும் பைத்தியம்தான்
செய்யவேணும் வைத்தியம்தான்.

பறக்கவேணும் பறக்கவேணும் என்றுநீ
வாய்வார்த்தையால் சொல்லிவிட்டால் போதுமா?
கூட்டைவிட்டு பறக்க வேணும் என்றால்
கூட்டின் கதவை நீதான் திறக்கவேணும்.

நடக்கவேணும் நடக்கவேணும் என்ற
எண்ணம் மட்டும் இருந்துவிட்டால் போதுமா?
நடந்துநீ முன்னேறி கடந்து போக
முதலடியை நீதான் எடுத்து வைக்கவேணும்.

தென்றல் உன்வாழ்வில் சுகிக்க வேணுமெனில்
ஜன்னலை நீதான் திறக்க வேணும்.
வெளிச்சம் உன்வாசல் வர வேணுமெனில்
கதவை நீதான் திறக்க வேணும்.

யாருக்குத்தான் இங்கு இல்லை கவலை
பாருக்குள் நுழைந்து குடித்து விட்டால்
தேரேறி போய்விடுமா பிரச்சனைகள் - அதன்
மீதேறி நீதான் போராட வேணும்.

ஆறுதல் வார்த்தைகள் அவசியம்தான் - அதுவே
அருமருந்து ஆகிவிடாது அறிந்து கொள்.
தேறுதலாகி நீவாழ்வில் வெற்றிபெற
மாறுதலாய் நீ சிந்திக்க பழகிக்கொள்.

சோற்றுக்குள் மறஞ்சி சிரிக்கும் அரிசிபோல
உனக்குள் மறஞ்சி இருக்கும் நம்பிக்கைதனை
நீ நம்பி அறுவடை செய்தால்தான்
வெற்றியெனும் சோற்றை நீ சுவைக்க முடியும்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (5-Feb-23, 1:31 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 253

மேலே