மடையான் கறி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அன்னநடை பின்னுசடை அங்க(ண்)மட மாதேகேள்
வன்னமடை யான்கறியை மாந்தினர்க்குத் - துன்னு
கரப்பான் சொறிசிரங்குங் காணுமைய வாதம்
உரப்பாக நீடும் உரை!

- பதார்த்த குண சிந்தாமணி

பொருளுரை:

மடையான் கறியை உண்டால் கடுவன், நமைக்கிரந்தி, சிலேட்டுமம், வாதம் இவை உண்டாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Apr-23, 9:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

மேலே