நினைப்பு..

அவ்வப்போது என் நெஞ்சுக்குழி சொல்லிடும் அவள் நினைப்பை "விக்கல்"..

அமாவாசை இரவிலும் வெண்ணிலவாக வந்தவள் வாழ்வில்..

உணர்வுகளுக்கு முக்தி அளித்து முன் நடக்கிறாள் அவள்..

கனவிலும் நினைவிலும் நீயே வருகிறாயடி என் இளம் கொடியே..

என் இதயத்தில் குடியேறி என் இரவுகளை தின்று தீர்க்கிறாய் ராட்சசியே..

செய்யாமல் செய்யும் உன் ரகளை என்னை கொல்லாமல் கொல்லுதடி..

அடி பூவே இன்னும் இன்னும் உன்னை சொல்ல ஆசைதானடி..

உன்னை வர்ணிக்க ஆரம்பித்தால் யுகங்களும் நிமிடங்களாய் மாறி போகிறது எனக்கு..

ப. பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (15-May-23, 9:21 pm)
Tanglish : NINAIPPU
பார்வை : 87

மேலே