ஓரவிழியால் பார்த்த பார்வை

ஓரவிழியால் நீஎன்னைப்
---பார்த்த பார்வை
சாரல் தூவுது
----நெஞ்சினில் உன்னை
ஆரத்தழுவிய தென்றல்
-----காதோரத்தில்
காதல் சொல்லுது
காரெழில் கூந்தல்
--- நறுமணத்தை
காதல் பரிசாய்
தந்து செல்லுது

எழுதியவர் : கவின்சாரலன் (20-Jun-23, 8:59 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 117

மேலே