1980 களில் மேலக்கலங்கலில் அம்மன் கோவில் திருவிழாபாகம் 1
80 களில் மேலக்கலங்கலில் அம்மன் கோவில் திருவிழா..பாகம் :1
பெண் : கருத்த காளை ரெண்டு பூட்டி
கருத்த மச்சான் எங்க போர
செவத்த சாட்டை போட்ட
மச்சான்
செவ்வானம் சிவக்குமுன்னே
எங்க போர
ஆண் : பதினெட்டு பட்டியிலே
மூத்தபட்டி
பார்போற்றும் மறவர் வாழும்
பட்டியாம் செவத்த புள்ளை
பாண்டிய தேச மேலக்கலங்கல்
அம்மன் கோவில் திருவிழாவைக்
கானப் போகப் போரன்
பிள்ளை..என் செவத்த
பிள்ளை..
பெண் : கலங்கல் திருவிழாவைக்
கண்டிட நானும்
கண்டாங்கி சேலைகட்டி
வாரே மச்சான் நீயும்
கொடையைப் பற்றிய
கொஞ்சம் சொல்லு
மச்சான் ..என் கருத்த
மச்சான்..
ஆண் : அப்படியா..சொல்றேன் கேளு
பிள்ளை..
அம்மன்களில் அக்கா
தங்கை எட்டுப்பேர்
தெரியுமா செவத்த புள்ளை
பெண் : நாகக்கனி முட்டையிலே
பிறந்த கதை வளந்த
கதையே தெரியும்
மச்சான்..என் கருத்த மச்சான்
ஆண் : எட்டுப் பேரில் கலங்கலில்
நாலு பேர் தனி தனி
சன்னதியில் மலைக்காளி,காளியம்மாள்,வடகாசியம்மள் , வடக்குத்தியம்மன்,தம்பிராட்டியம்மன்..
நால்வரும் ஊருக்கு வடக்கே அமர்ந்து
நல்லருள் புரிந்தே காத்து வராங்க ..புள்ளை.. என்செவத்த புள்ளை
நல்லதோர் நாளில் கொடை கொடுக்க
நாள் குறித்து கொடை சாட்டியே
பத்து நாள் திருவிழாவும்
பக்கத்து பட்டி தொட்டி நடுநடுங்க
பட்டாசு வேடியுடனே மேளம் முழங்க
பக்தி பெருக பரவசமடையும் மனமும் புள்ளை ..என் செவத்த புள்ளை..
தொடரும்....
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்