இன்றைய அரசியல்

நித்தம் நித்தம் கள்ளமறியா மக்கள்முன்னே
எத்தனைக் கோலங்கள் போடுகின்றார் அரசியல்வாதிகள்
எது மெய் எது பொய் என்று அறியமாட்டாது
பொதுமக்களும் குழம்பி போகின்றார் வெகுவே
தேர்தலும் வந்துசேருகிறது பின்னே மக்களும்
மாறி மாறி அதே தவறு செய்கிறார்கள்
மெய் அறியாது பொய்க்கே மாலையிட்டு
வரவேற்பு அளித்து பின்னே மீண்டும்
மீண்டும் மீளா துயரத்தில் தம்மை இழுத்து
என்று தீரும் இவர்கள் துயரங்கள் ...யாரறிவார்
காலம் விடை தருமா ? பொறுத்திருந்து பார்ப்போமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (7-Oct-23, 9:02 am)
Tanglish : indraiya arasiyal
பார்வை : 1254

மேலே