நம் வாழ்க்கை வாழ்வதற்க்கே 555

***நம் வாழ்க்கை வாழ்வதற்க்கே 555 ***
வாழ்க்கை...
தாயின் கருவில் கரையும்
சில குழந்தைகள்...
பிறந்த சில மணித்துளிகளில் தூக்கி
எறியப்படும் சில குழந்தைகள்...
இதற்கிடையில்
நீயும் பிறந்தாய்...
இறைவன்
என்ன செய்தான்...
பெற்றோர்கள் என்ன
செய்தார்கள் என்று கேள்வி எதற்கு...
இப்போது நீ இருக்கும்
நிலைகூட கடவுளின் வரம்தான்...
உன்
பெற்றோரின் பிச்சைதான்...
உன் வாழ்க்கை மற்றோர்க்கு
வேடிக்கையாக இருக்கலாம்...
உன் வாழ்க்கையை
நீதான் வாழ வேண்டும்...
பட்டை தீட்ட தீட்டத்தான் வைரத்தின்
மதிப்பும் மினுமினுப்பும் கூடும்...
உன் வாழ்க்கையை
பட்டை தீட்ட தீட்டத்தான்...
வைரமாய் ஜொலிப்பதும்
மதிப்பு கூடி இருப்பதும்...
உன் வாழ்க்கை
உன் கையில்தான்...
கிடைத்த இந்த
பிறவியை வாழ்ந்துபார்...
மற்றவர் உன் வாழ்க்கையை
கண்டு பொறாமைப்படுவார்கள்...
வாழ்க்கை இழப்பதற்கு அல்ல
எதையும் சாதிப்பதற்க்கே.....
***முதல்பூ.பெ.மணி.....***