இறையை என்றும் இறை

வெள்ளைத்தாழிசை

படைப்பும் பிறப்பும் படைத்தவனின் வண்மை
கடைசியில் வைப்பான் கடைத்தேறும் பாதை
இடையில் வருமே துயர்

நடையில் செயலில் நடைமுறை வாழ்வில்
தடைகள் பலவாய் தடுமாறச் செய்யும்
திடமே விலக்கும் துயர்

உடலின் பலங்கள் உதிர்ந்திடும் போதும்
மடமையை நீக்கி மனவுறுதிக் கொண்டால்
உடனே விலகும் துயர்
— நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (3-Nov-23, 2:24 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 29

மேலே