சொல்லடியே கிளியே
சொல்லடியே கிளியே
====================
அம்மன் ஊர்வலத்தில்
ஆயிரத்தில் ஒருத்தியாக /
கண்டேனடி காதல்
கொண்டேனடி உன்னை/
மஞ்சள் உடையிலே
மயங்கியதே மனமும் /
மல்லிகைப் பூவாக
மலர்ந்தப் புன்னகையால்/
பேசவே மறந்தனேடி
பரவசம் கொண்டு/
புயலாக வந்தவளே
பார்வையால் வீழ்த்தி/
இதயத்தை நொறுக்கி
இயல்பாகச் செல்பவளே /
இனிய செய்தியாக
இணைந்திடச் சொல்லடி/
சமத்துவ புறா ஞான அ.பாக்யராஜ்

