தில்லையாடி வள்ளியம்மை பிறந்த தின கவிதை

#தில்லையாடி_வள்ளியம்மை_பிறந்த_தினம் சிறப்பு கவிதை....

படைப்பு கவிதை ரசிகன்
குமரேசன்

இந்தத் "தியாகமலரைப்"
பெற்றெடுத்தவர்கள்
"தில்லையாடி"மண்ணில்
பயிர் செய்யப்பட்டவர்கள்....

தறி ஓட்டியும்
வாழ்க்கையை
ஓட்ட முடியாமல்
குடும்பத்தைப் பிடிங்கித் தென்னாப்பிரிக்காவுக்கு
எடுத்துச் சென்று
"வணிகக் கடையில்" நட்டனர் முனுசாமியும் மங்கலமும்...

அங்குதான்
இவர்கள்
குடும்பச்செடியில்
1898 பிப்ரவரி 22 இல்
இந்தத் "தியாகமலர்" பூத்தது....

16 வயதில்
எல்லாம் பெண்களும்
"அழகு நிலையத்திற்குச்"
செல்வார்கள்....
இவள் தான்
"காவல் நிலையத்திற்குச் "
சென்றாள்......

கிறித்தவ தேவாலயத்தில்
நடந்தால்தான்
அது "திருமணம் "
இல்லை
அது "வெறுமணம்" என்று
தென்னாப்பிரிக்கா அரசு
அன்று ஆணைப் பிறப்பித்தது...

சராசரி காந்தியாக
வேலைத் தேடிச்சென்றவரை
"போராளியாக" மாற்றிய
தென் ஆப்பிரிக்காவில்
இந்த ஆணைக்கு எதிராக
அண்ணல் காந்தியடிகள்
போராடிக் கொண்டிருந்தார்....

நாளைய
இந்தியா சுதந்திரப் போராட்டத்தை
நடத்துவது எப்படி? என்று
காலம்
காந்தியடிகளிடம்
அன்று
ஒத்திகைப் பார்த்திருக்கிறது....

இரும்பைக் காந்தம் ஈர்ப்பதும்
பொருட்களைப் புவி ஈர்ப்பதும்
இயற்கை நியதி போல்
காந்தியின்
அகிம்சைப் போராட்டம்
வள்ளியம்மையை ஈர்த்தது
பெரிய ஆச்சரியமல்ல.....

இந்தியர்களுக்கு
வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து
வள்ளியம்மை செய்த
போராட்டத்திற்கு
மூன்று மாதம்
கடுங்காவல் தண்டனை
பரிசாகக் கிடைத்தது ....

சிறை உணவு என்றாலே
"சோற்றில் கல் மண்" இருக்கும்
ஆனால்
இவளுக்குத்தான்
"கல் மண்ணையே!"
சோராகக் கொடுத்தார்கள் .....

அவளுக்கோ !
கல் கற்கண்டானது...
மணல் சர்க்கரையானது....

கல்லும் மண்ணையும்
சாப்பிட
அவளுக்கு மனம்
ஒரு நாளும் அஞ்சவில்லை...
உடல் தான்
உருக்குலைந்துப் போனது .....

உடல் "சிதைவதைக்" கண்டு
சிறைக் காவலர்கள்
விடுதலை செய்ய
முன் வந்தனர்கள்....
அவளதான் முன்வரவில்லை
சிறையை விட்டு வெளியேற....

இந்தியர்கள்
தோள் மீது வைத்த
வரிச் சுமையை
இறக்கினால் தான்
சிறையை விட்டு
வெளியேறுவேன் என்ற
தீர்க்காமான முடிவு
வரிச்சுமையை
தோளிலிருந்து இறக்கியது....

காந்தியடிகளைக் கண்டு
இந்தியாவே வியந்தது
ஆனால்
அந்தக் காந்தியே!
வியந்தது
வள்ளியம்மையைக் கண்டுதான்....

காந்தியின் கேள்வி....
சிறைச்சென்றதற்காக
வருத்தப்படுகிறாயா
தயங்கி தயங்கிக் கேட்டார்?
அவள் பதில்....
தயங்காமல் சொன்னாள்
இன்னொரு முறை கூட
செல்லத் தயார் ....

இந்தியர்களுக்காகப்
போராடிய அவள்...!
அவள் உயிருக்காக
போராடாமல் போய்விட்டாள்
1914 பிப்ரவரி 25 அன்று
இந்த மண்ணை விட்டு.....
மண்ணை விட்டுப் போனாலும்
எங்கள் மனதை விட்டு
என்றும் போக மாட்டாய்....

உன்னுடைய
பிறந்த தினமும்
இறந்த தினமும் ஒரே நாளாகக்
கொடுத்து....
உன் இறந்த தினத்தில் கூட
நாங்கள்
வருத்தப்படக் கூடாது என்று
உன்னுடைய
பிறந்த தினத்தையே
ஒவ்வொரு ஆண்டும்
எங்களை மகிழ்ச்சியாகக்
கொண்டாட வைத்து விட்டாய்...

வாழ்க்கை என்பது
"வயதில்" இல்லை
"வாழ்வதில்" இருக்கிறது என்று
எங்களுக்கு சொல்லாமல்
சொல்லிவிட்டு போயிருக்கிறாய்...

போய் வா மகளே !
இந்த பூமி உள்ளவரை
உன் புகழ் நிலைத்திருக்கும்.....

கவிதை ரசிகன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (22-Feb-24, 4:03 pm)
பார்வை : 99

மேலே