ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வோம்

ஆணும் பெண்ணும்
நிகரெனக் கொள்வோம் /
அவளும் நாமும்
ஓருயிரெனச் சொல்வோம் /
சரித்திரம் படைத்திட
இடம் கொடுத்திடுவோம்/
விசித்திரங்கள் பல
இணைந்தே படைத்திடுவோம் /

பாரதம் போற்றும்
பாரதியின் கூற்றை/
பாவையர் எல்லோரும்
மனதால் வெல்லட்டும் /
அடுப்படியோடு முடங்கும்
எண்ணத்தை மெல்லட்டும்/

கற்றலிலும் காற்றலிலும்
ஓங்கியே துள்ளட்டும்/
ஏங்கியவளோ உள்ளத்தில்
இன்பத்தை அள்ளட்டும்/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (8-Jun-24, 8:52 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 45

சிறந்த கவிதைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே