உன்னை அழவைத்துப் பார்ப்பதில் எனக்கு என்னதான் இன்ப

உன்னை
அழவைத்துப் பார்ப்பதில்
எனக்கு என்னதான் இன்பமோ
தெரியவில்லை!
வளையல் உடைத்து,
தாவணி கலைத்து,
முகத்துக்கு முன்னால்
புகை ஊதி...

நீ
கண் கலங்கும்
போதெல்லாம்
முன்னர் இருந்த நான்
வேறுபோல
உன்னை அணைத்துக்கொண்டு
மடியில் சாய்த்துக்கொள்ள வேண்டும் போல ஆகிவிடுகிறேன்.
நீயும் முன்னிருந்தவன்
இவனில்லை என்பது போல்
உடனே அணைப்புக்குள்ளாகி
மடியில் சுருண்டு கொள்கிறாய்!
ஒரு குழந்தை
போல அழும்
உன்னை சமாதானப்படுத்தும்போது
முன்னிலும் அதிகமாய்
உன்மேல் காதல் வசப்படுகிறேன் நான்!
என்ன நடந்து என்ன?
உன் முதுகு குலுங்குவது
எப்போது சற்றே குறைகிறதோ
அப்போதே
அடுத்து உன்னைச் சீண்ட
என்ன செய்யலாம் என்று
யோசிக்க ஆரம்பித்துவிடுகிறது மனம்!

எழுதியவர் : suguna (13-Dec-11, 4:51 pm)
சேர்த்தது : suguna
பார்வை : 261

மேலே