வௌவால் குஞ்சு....
அருகே கேட்டது கீச் கீச் சத்தம்
காது ஒத்த திசையினில்
கண்களை அவன் செலுத்த
காலருகில் கிடந்தது
கண்திறவா நிலையினில்
எறும்புகள் மொய்த்திருக்க
வௌவால் குஞ்சொன்று.....
அள்ளி அவன் எடுத்து
அரிந்துவிட்டான் எறும்புகளை
அழகான குஞ்சுதனை
பாதுகாப்பாய் பத்திரப்படுத்த
பக்குவமாய் ஓரிடம் தேடி
பதட்டத்துடன் சேர்த்துவிட்டான்..................
இரைதேட கண்ணில்லை ,
பாலூட்ட தாயும் இல்லை ,
பரலோகம் உறுதி என அறிந்தும் - அதை
பாதுக்காக்கும் நடவடிக்கையில்
பயணிக்கிறது அந்த பாவிமனம்........................