சிதறிக் கிடந்த ரூபாய்களும், டாயிலெட் பேப்பரும்!

இன்று காலையில்
சாலையில்
ஒரு விபத்து !

பையனும் அப்பாவும்
வந்த பைக்கில்
கார் மோதி
கீழே
விழுந்ததில்
அடிபட்டுக் கீழே கிடந்தார் அப்பா !

அவர் கொண்டு வந்த பையில் இருந்த
பல இலட்சம் ரூபாய் நோட்டுகள்
தரையிலே சிதறிக் கிடந்தன !

ஓடி வந்தனர் பல பேர் உதவி செய்ய ;
அவர்களுள் ஆட்டோ ஓட்டுநரும் ஒருவர்;
கீழே கிடந்த பணத்தைப்
ஒரு பொருட்டாகப் பாராது
அடிபட்டவரைத் தூக்கிச் செல்வதிலேயே
குறியாய் இருந்தார்
அந்த ஆட்டோ ஓட்டுநர் !
காசு வாங்கிடச் சொன்னார்கள்
அருகில் நின்றோர் ;
அதற்கு அந்த ஆட்டோ ஓட்டுநர்
"இதற்குப் போய் நான் காசு வாங்கினேன்
என்றால், என் பெற்றவள் மீது ஐயம் !
பிறப்பின் மீது சந்தேகம்!"
என்று சொல்லிவிட்டு,
துளி நொடி கூட அங்கே நிற்காமல்
மருத்துவமனைக்குத் தூக்கி
ஓடினார் அடிபட்டவரை !

அந்த ஆட்டோ ஓட்டுநர் முன்னே
சிதறிக் கிடந்த
அத்தனை ரூபாய்களும்
டாயிலெட் பேப்பர்களாகத்தான் தெரிந்தது !

எழுதியவர் : முத்து நாடன் (6-Jan-12, 11:36 pm)
பார்வை : 249

மேலே