காதல் என்பது இதுதானா ?
காதல் என்பது இதுதானா?
கண்களில் இமைகூட சுமைதானா?
வெயிலும் குளிர்கிற நிழல்தானா?
விஷத்தைக் குடிப்பது நிஜம்தானா?
அடையாளம் தெரியாத நதி ஒன்று
எனை நீந்தச் சொல்வதும் இதுதானா?
புதிய வேகம் உடலில் பரவி
பூக்கள் தூவுதே இதுதானா ?
கண்மாய் மீன்கள் தானே விழுந்தன
காத்திருக்கும் கொக்கின் அலகிலே!
சும்மா பாதையில் போனவன் முன்னே
சொர்க்கம் வந்தது ஒரு பெண் அழகிலே!
நெஞ்சில் நுழைந்தாள் நினைவின் வழி-என்னை
நெரித்து வளைக்கிறாள் நினைத்தபடி !
கொஞ்சம் கூட இடைவெளியின்றி
கொஞ்சச் சொல்கிறது அவள் அழகின் துளி !
காதல் என்பது இதுதானா?
கண்கள் பார்த்த காகிதப் பூக்கள்
காதல் வந்ததும் மணக்கிறதே!
கல்லும் முள்ளும் கலந்த பாதையில்
கால்கள் நடந்தும் இனிக்கிறதே!
காதல் என்பது இதுதானா ?