முதல் பார்வையில் .........................................

முதல் பார்வையில் முதல் ஸ்பரிசத்தில்
தடுமாற்றங்கள் எனைத் தீண்டிட தவித்தேன்....
விழிமூடியே குரல் கேட்கிறேன்
நினைவோடு நான் நிஜமாகிறேன்
துடிக்கிறேன் தளிரே...............
கண்ணீரில் கரைந்தாயடா
கனவோடு தான் நான் வாழ்ந்திட
என் நாட்களும் நகர்ந்தோடுதே!
இமைமூடியே இரவோடும் நான்,
இமைக்காமலே இசைக்கிறேனடா
இதழ் சொல்லாத வலி என்னவோ?
தனிமையிலும் தயங்குகிறேன்
மனம் பேசிட மயங்குகிறேன்
உயிர் இருந்தும் உறைந்தேனடா
அந்த நிமிடம் மீண்டும் தோன்றிட
மறுபடியும் மறக்காமலே
காலங்களோடு சுற்றும் பூமி என்னை சுற்ற
என் சுவசமோ உன் மூச்சோடு
முதல் பார்வையில் முதல் ஸ்பரிசத்தில்
முழுதாய் தொலைந்தேன் உயிரே...............

எழுதியவர் : sukhanya (23-Feb-12, 10:55 pm)
Tanglish : muthal paarvaiyil
பார்வை : 220

மேலே