என் குழந்தையும் நானும்! (பகுதி ஐந்து )
![](https://eluthu.com/images/loading.gif)
எச்சில் -
ஒழுக ஒழுக
எனைக் குடிக்கிறாய்,
உடம்பெல்லாம் ஏறி மிதித்து
கன்னம் கீறி
மூக்கை கடித்து
தலைமுடி பிடித்திழுத்து
உதட்டை கிள்ளி
அப்பப்பா...
உனை என்ன செய்கிறேன் பாரென்று வந்த
கோபத்தை -
ஒரேயொரு முத்தத்தில்
ஒத்திஎடுக்கிறாய்.
நான் கொஞ்சம் சிரிக்கையில்
மீண்டும் - நீ
கிள்ளி கீறி எனை ஏறி மிதிக்க
நீள்கிறது - உனக்கும் எனக்குமிடையே
ஒரு -
முத்தத்திற்கான போர்!
இப்பொழுதெல்லாம் நீ
நன்றாகவே நடக்கிறாய்,
இருந்தும் -
சந்தைக்கு செல்கையில்
வீடு வருகையில்
வெளியே செல்கையில்
உனை தூக்கிக்கொண்டே
நடக்கிறேன்,
நீ கனத்தாலும்
உனை சுமப்பதில்
எனக்கொரு ஆசை;
சொர்க்கத்தை சுமப்பது
இப்படித் தான் -
சுகம் போல்!
தியானம் செய்கையில்
மடிமீது வந்து
அமர்ந்து கொள்கிறாய்,
சாமி கும்பிடுகையில்
நானுனை -
தூக்கிக் கொள்கிறேன்.
இடையே -
நீ என் மூக்கை பிடித்து
விளையாடுவாய்..
காதை நோண்டி சிரிப்பாய்..
கைதட்டி என் காதோரம் கத்துவாய்..
எனக்கு -
உள்ளே நான் வணங்கும் கடவுள்
வெளியே -
என்னோடிருப்பதாய் இருக்கும்!
அன்பும் கண்டிப்பும்
குழந்தைக்கு -
ஒருசேர வேண்டுமென
அவ்வபொழுதுனை கண்டிக்கிறேன்,