[162 ] குழம்பிப் போயிருக்கின்றேன் ..மன்னிக்கவும்!

சாதி மதத்தினைத்
தொலைத்திடவோ?
சண்டைகள்
எதைவைத்துச் செய்திடவோ?

காசு பணத்தினை
மறந்திடவோ?
பின்னர்
கைகளில் வாக்குமே
என்செய்யவோ?

குத்து விளக்குமே
போதுமென்றால்
இங்கே
கொள்ளிக் கட்டையை
உதறிடவோ?

பழகும் தமிழ்மொழி
போதுமென்றால்
இங்கே
பிறமொழி மக்களை
ஒதுக்கிடவோ?

நல்ல மருமகள்
வேண்டுமென்றால்
ஒரு
நல்ல மாமியார்
வேண்டாமோ?

வெல்லம் இருக்கும்
இடத்திலெல்லாம்
எறும்பு
வேடிக்கைக் கேள்விகள்
கேட்டிடுமோ?

தள்ளி ஒதுக்கி
நடந்திடுவீர்!
எந்தன்
தவிப்பைக் குழப்பத்தைப்
போக்கிடுவீர்!
-௦-

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (16-Mar-12, 9:25 am)
பார்வை : 189

மேலே