எல்லாமும் நீயே
வானிலே, மண்ணிலே, நீரிலே,
எல்லாம் நீதானடி.
மரத்திலே, பூவிலே, கனியிலே,
எல்லாம் நீதானேடி.
மலையிலே, மடுவிலே, நதியிலே,
எல்லாம் நீயேயடி.
கண்ணிலே, கனவிலே, நினைவிலே,
எல்லாம் நீயடி.
அலையிலே அலையுதிற்கும் கடலிலே,
எல்லாமும் நீயே.
மாரிலே என்னைத் தாலாட்டிட,
மடியிலே என்னைச் சீராட்டிட,
கன்னத்தில் முத்தமிட்டிட
ஊடலில் உதடு கடித்திட,
எல்லாம் நீயே வேண்டும் என்றும்.