இனியும் ஒரு ஜென்மம் வேண்டும் என் காதலியுடன் சேர்ந்து வாழ !

என் உலகமே ! அஞ்சலி உன்னை உயிருக்கு உயிராக காதலித்தேனே !

சுவாசிக்காமல் கூட இருந்தேன் !

சுவாசம் கொடுக்க நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில் !

கண்ணில் தூசு விழுந்தால் கூட கண்ணை கசகுவதில்லை !

கண்ணில் உன் பிம்பம் இருந்ததினால் !.

ஏங்கி ஏங்கி தவித்தேன் நீ என்னுடன் பேசும்

அன்பான வார்த்தைகளுக்காக !

பெரிய சோகங்களும் தவிடு பொடியானது !

அன்பே சோகத்திற்கு மருந்தாய் நீ இருந்ததால் !

ஆனால் ஏனடி மறுத்தாய் ?

நீ என் காதலை மறுத்ததை ஏற்று கொண்ட என் இதயம் !

உண்மையில் ஏற்று கொள்ள வில்லை !!

இன்னொருவன் காதலை உன்னிடம் சொன்னதும் ...

நீ ஏற்று கொண்டதை ...............................................

உண்மையில் என் உயிர் துடித்து கொண்டிருக்கும்

உன் இதயத்தில் கை வைத்து சொல் !

என்னை போல் உன்னை நேசித்தவர் எவருமுண்டோ !


தாங்கமுடியவில்லை

என் உதடுகள் பேசிய அன்பான வார்த்தைகளை கேட்ட

உன் காதுகள் !!!!

இனிமேல் அவன் பேசுவதை மட்டும் கேட்கும் வேதனையே !

எனக்கு மட்டும் சொந்தமான உன் அங்கங்கள் ! அய்யோ !

எப்படி சொல்வது ! யாரிடம் சொல்லி முறையிடுவது !

அரபி கடலும் ஒப்பாரி வைக்கிறது !

என் அழுகையின் ஆழத்தை தாங்க முடியாமல் !

இவை அனைத்தும் காலம் கடந்து காதலை

சொன்னதால் வந்த வினையோ !

இல்லை உன் நினைவுகளுடன் மட்டும் நான் வாழ

ஆண்டவன் விதித்த விதியோ !

உண்மையில் இதுவரை என் அன்பின் ஆழத்தை

நீ புரிந்து கொள்ள வில்லையா ! அஞ்சலி !

நீ இருந்த என் இதயத்தில் எவரேனும் வந்தால் !

துரத்தி அடிக்கின்றன உன் நினைவுகள் !

உன் நினைவுகளுக்கு பிடித்த என்னை !

ஏன் உனக்கு மட்டும் பிடிக்கவில்லை !


உன் மனதில் என்னக்கு இம்மியளவு கூட

இடமில்லை என்பது எனக்கு தெரியும் !

இருந்தாலும்

என்னைவிட்டு இம்மியளவும் நீங்காமல்

நீ இருப்பாய் !


தயவு செய்து என்னை காதலில் தோற்றவன்

என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் !

எனக்கு இனியும் ஒரு ஜன்மம் வேண்டும்

என் காதலியுடன் சேர்ந்து வாழ !


என்றும் அவள் நினைவுகளுடன்

அரவிந்த் _ அஞ்சலிக்காக !!!!!!!!!!!

எழுதியவர் : Aravind (22-Mar-12, 7:11 pm)
பார்வை : 374

மேலே