அம்மா
என் கண்கள் கண்ட முதல் காட்சி நீ...
என் உதடுகள் பேசிய முதல் வார்த்தை நீ.,
என் உணர்வுகள் கொண்ட முதல் உறவு நீ.,
என் அறிவு வளர முதல் ஆசிரியை நீ.,
என் வாழ்க்கை கடலுக்கு கலங்கரைவிளக்கம் நீ.,
என் ஆதியும் நீ.,
என் அந்தமும் நீ.,
நான்
பிறந்தது உன்னால்...
வளர்ந்தது உன்னால்...
படித்தது உன்னால்...
இன்று வரை நான் சிறப்பாய்
வாழ்வது உன்னால்....
உன்னை எப்படி பிரிய முடியும் என்னால்...
உன் உருவில் தெய்வம் வாழுதே என்னுடன்...
கடைசி வரை காத்து வருவேன் என் கண்ணுடன்.,
நீயின்றி போனால்.,
என் உடல் போகும்
இந்த மண்ணுடன்.....