மோட்சம் கொடு

கண்ணீர் சிந்தும் உன்
விழிகள் கண்டால்,
வெந்நீரில் விழுந்த வெற்றிலையாய்
வெதும்பிப் போகிறேன்!
துடைப்பதற்கு துப்பட்டா
எதற்கு? இதோ..
தவமிருக்கும் என் கைக்குட்டைக்கு
தயவுசெய்து மோட்சம் கொடு!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (13-Apr-12, 6:35 pm)
சேர்த்தது : பார்த்திபன்
Tanglish : mootcham kodu
பார்வை : 180

மேலே