உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்

---- உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் ----

ஊதிய உயர்வு கேட்டு
உண்ணாவிரதம், வேலை நிறுத்தம்
உட்கொண்டிருக்கும் தோழர்களுக்கு,

பள்ளிக்கு செல்ல வசதியில்லாமல்
பஞ்சர் ஓட்டும் சிறுவர்களுக்கு,

ஓய்வு நாற்காலியில் முதுகு தேய்ந்து
உட்கார்ந்திருக்கும்
பெரிய இளைஞர்களுக்கு,

விபத்தில் எலும்பு முறிந்து
விடுமுறையில் இருக்கும்
குடிபோதை குடிமகன்களுக்கு,

வேலை கிடைக்காமல் திண்டாடுடும்
இந்திய தூண்களான
இளைஞர்களுக்கு,

ஏறக்குறைய விலங்குகளாய் கூட
ஏற்று கொள்ள படாத
என் அரவாணி சகோதரர்களுக்கு,

ஆடைகளைவிட அதிகம்
கிழிந்திருக்கும்
தேகம் கொண்ட
வேசி பெயர் பெற்ற தோழிகளுக்கு,

எலிக்கறி திண்ணும்
எங்கள் விவசாய்களுக்கு,

பொதி சுமக்கும் கழுதைகளுக்கு
ஏர் உழுத எருதகளுக்கு,
நன்றியுடன் காவல் இருக்கும்
நாய்களுக்கு,

பிரியத்துக்குரிய மற்ற
பிராணிகளுக்கு,

கலைத்துறை நண்பர்களுக்கு,

மற்றவர் திகைக்கும்படி
மண்ணில் வாழும்
மாற்று திறனாளிகளுக்கு,

இந்தியாவை தலைநிமிர செய்த
விஞ்ஞானிகளுக்கு
விளையாட்டு வீரர்களுக்கு,

ஒவ்வொருவரும் பெரிதும் நேசிக்கும்
உழைப்பாளிகளான பெற்றோர்களுக்கு,

கழிவு நீர் சுத்தம் செய்யும் நண்பர்,
செருப்பு தைக்கும் தோழன் தொடங்கி
மந்திரி, பிரதமர், குடியரசு தலைவர் வரை...

உயிர் தந்த தியாகிகளுக்கும்
உலகில் உள்ள
உழைக்கும் மக்கள் அனைவருக்கும்
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.


தன்னம்பிக்கையுடன்
தலைவணங்கும்
--- தமிழ்தாசன் ----

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (1-May-12, 12:58 am)
பார்வை : 339

மேலே