ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

மின் விளக்கின்
வெளிச்சத்தில்
எடிசன் முகம் !

இறந்தபின்னும்
ஒலி எழுப்பும் விலங்கு
மத்தளம் !

திட்டங்கள் கோடிகளில்
ஏழைகள் தெருக் கோடியில்
என்று விடியல் ?

பாலியல் குற்றவாளி
கொலைக் குற்றவாளி
சாமியார்கள் ?

தாமதமான நீதி அநீதி
தண்டியுங்கள் விரைவில்
இலங்கைக் கொடூரன் !


சரியாக ஆடும்
ஆட்டத்தின் பெயரோ
தப்பாட்டம் !

இதயத்தை இதமாக்கும்
கோபத்தைக் குறைக்கும்
இசை !

மனதை மலர்விக்கும்
சிந்தையைச் செதுக்கும்
கவிதை !

எழுதியவர் : இரா .இரவி (8-May-12, 9:45 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 357

மேலே